Wednesday, July 15, 2009

நட்பு..!

நமது வாழ்வில் பாதி நாட்கள் நண்பர்களிடம் தான் பழகுகின்றோம்...அதில் நல்ல நண்பர்களிடம் பழகினால் மேல் நோக்கி செல்வோம் மாறாக தீயவர்களிடம் பழகினால் தீய வழிகளில் தான் செல்வோம்.

(எ.கா) மா மரத்தின் அழுத்தமும் (துவர்பு) வேம்பு மரத்தின் (கசப்பு) அழுத்தமும் சேர்த்தல் அங்கு அறளி( விசம்) மரம் உருவாக்கின்றது. ஆதனில் நாம் சேரும் சேர்கை தான் நம் வாழ்வை மேல்நோக்கி செலுத்தும்.

"ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். "

வெற்றி..!

வெற்றி எப்போது வரும் என்றால் மனத்தில் மகிழ்ச்சி இருக்கும்போது....! மகிழ்ச்சி எப்போது வரும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
நாம் எப்போதும் ஒன்று மனதில் வைத்துகொள்ள வேண்டும் ......நமக்காக எப்போதும் நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் நமது அம்மா,அப்பா மட்டுமே..அவர்கள் தான் ..அவர்கள் தூக்கம்,கனவு,பேச்சு எல்லாம் நம்மைப்பற்றித்தான்..அதனால் நமது கடமை அவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்தால் நமக்கு தானாகவே வெற்றி வரும்...

எண்ணம்..!


வணக்கம்,
நாம் ஏன் இந்த மண் உலகுக்கு வந்தோம் என்று தெரியுமா...! அதை நாம் சிந்திக்க வேண்டும்..ஏன் என்று நீயே உன்னில் கேள்வி எழுப்பு உனக்குள் அதற்கு விடை தெரியும். உன் உள்ளே அனைத்தும் உள்ளது பிறகு ஏன் நீ வெளியே தேடுகிறாய்..


நீ எண்ணும் எண்ணமே செயல் ஆகுகிறது நீ என்ன நினைக்கின்றாயோ அது தான் வலுவாகிறது.(எ.க)
நாம் அன்றாட உபயோகிக்கும் டீவீ ரிமோட் டில் நமக்கு தேவைப்படி அமைத்துக் கொள்கிறோம் 1 அழுத்ினால் செய்தி சேனல் வருகிறது 2 அழுத்ினால் பாட்டு சேனல் வருகிறது எப்படி எனில் மின் காந்த அலைகளில் சுற்றி வருகிறது அது போலத்தான் நாம் என்னும் எண்ணங்கள் தீயவை என்றால் தீயவை வரும் மேல் நோக்கி சிந்தித்தால் மேல் நோக்கி செல்வோம்.